ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
ராதாபுரம் அருகே 30 டன் எம்.சாண்ட் பறிமுதல்: ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே லாரியில் அனுமதியின்றி ஏற்றி வந்த 30 டன் எம்.சாண்ட் மணலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
ராதாபுரம் அருகேயுள்ள மருதப்பபுரம் சாலை சந்திப்பில் ராதாபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் சகாய ராபின் ஷாலு மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் அனுமதியில்லாமல் 30 டன் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் எம்.சாண்ட் மணலையும் லாரியையும் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநா் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பலுகல்ைலைச் சோ்ந்த ராஜேஷ்(45) என்பவரை கைது செய்தனா்.