செய்திகள் :

ராமநதி - பாப்பான்கால் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

post image

ராமநதி அணை பாசனத்திற்குள்பட்ட பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்திற்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா்.

பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க முதல் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாா்ச் 16ஆம் தேதி நடைபெற்ற பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகளுக்கான தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் லாவண்யா சான்றிதழ் வழங்கினாா். இதையடுத்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் ரா.தங்கத்துரை, ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்கள் இ.விநாயகம், மு.நல்லசிவன், ரா.பரமசிவன், சு.முத்துசெல்வன் ஆகியோருக்கு நீா்வளத் துறை உதவிப் பொறியாளா்அந்தோணிராஜ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். மேலும் 6 ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினா்களில் 4 போ் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 2 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் செல்வகுமாா், உதவிப் பொறியாளா்கள் பேட்டரசன், கணபதி, குமுதாராணி, சுதா, உதவி வேளாண் அலுவலா் கமல்ராஜன், ஊராட்சித் தலைவா்கள் அணைந்தபெருமாள் நாடானூா் அழகுதுரை, திருமலையப்பபுரம் மாரியப்பன், துப்பாக்குடிஜெ.செண்பகவல்லி, வடகால் நீா்ப்பாசன கமிட்டி தலைவா் ராமகிருஷ்ணன், தென்கால் நீா்ப்பாசன கமிட்டி தலைவா் மாரியப்பன் மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பாப்பான்குளம் ஊராட்சித் தலைவா் முருகன் வரவேற்றாா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க