செய்திகள் :

ராமநாதபுரம்: தாக்கியவர்களை கைதுசெய்யக் கோரி உயிரை மாய்த்த முதியவர்; எஸ்.பி அலுவலகம் முன் விபரீதம்!

post image

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் சேது மாணிக்கம் (70). இவர் ஆட்டோ ஓட்டுநர். இந்நிலையில் ராமேஸ்வரம் என்.எஸ்.கே வீதி பகுதியில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார் சேது மாணிக்கம். அப்போது சாலையில் சென்ற திமுக பிரமுகரான பாபா முருகன் என்பவர் மீது ஆட்டோ இடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாபா முருகன் சேது மாணிக்கத்திடம் தகராறு செய்துள்ளார்.

இந்த தகராறு முற்றிய நிலையில் பாபா முருகனும் அவருடன் வந்த சிலரும் சேர்ந்து சேது மாணிக்கத்தைத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சேது மாணிக்கம், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து பாபா முருகன் மீது ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் சேது மாணிக்கம் புகார் அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார், எதிர் தரப்பான பாபா முருகனிடம் இருந்தும் புகார் மனுவை வாங்கியுள்ளனர்.

மாவட்ட காவல் அலுவலகம்
புகார் மனு

இதனால் வேதனை அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சேது மாணிக்கம், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்தும், தன்னை தாக்கிய பாபா முருகன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்யக் கோரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வந்திருந்தார். எஸ்.பி அலுவலகம் வந்த அவர், திடீரென தான் கொண்டு வந்திருந்த விஷத்தைக் குடித்துவிட்டு மயங்கி சரிந்தார்.

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் சேது மாணிக்கத்தை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சேது மாணிக்கம் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரைக் கண்டித்து மாவட்டக் காவல் அலுவலகம் முன்பே வயது முதிர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்க்கிங் பிரச்னை; விஞ்ஞானியை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள்... மொகாலியில் அதிர்ச்சி!

மொகாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் டாக்டர் அபிஷேக் (39) என்பவர் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விட்சர்லா... மேலும் பார்க்க

குஜராத்: மாணவர்கள் உட்பட 7 பேர்: 18 மாதங்களாக தொடர் பாலியல் வதை - கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18 மாதங்களாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 18 ... மேலும் பார்க்க

திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - போலீஸார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் தி... மேலும் பார்க்க

சென்னை: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் - கடன் தொல்லை? ; விசாரித்து வரும் காவல்துறை

சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் 7-வது சாலையில் வசித்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் - வ... மேலும் பார்க்க

`ரூ.1,200 கோடி முறைகேடு; எலும்புகள் வைத்து பில்லி சூனியம்'- மும்பை மருத்துவமனையில் அதிர்ச்சி புகார்!

மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை மிகவும் பிரபலம் ஆகும். சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் அவரது வீட்டில் திருடனால் தாக்கப்பட்டபோது இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தொண்டு... மேலும் பார்க்க

Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன?

திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த இரு வழிச்சாலையில் ... மேலும் பார்க்க