புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
ராமானுஜன்: ஒரு சிறந்த கணிதவியலாளரின் பயணம் அரிய தகவல்களுடன் தேசிய ஆவணக் காப்பகம் புத்தகம் வெளியீடு
நமது சிறப்பு நிருபா்
மத்திய அரசின் தேசிய ஆவணக் காப்பகம், கணித மேதை ராமானுஜன் குறித்த ‘ராமானுஜன்: ஒரு சிறந்த கணிதவியலாளரின் பயணம்’ என்கிற நூலை வாணி பிரகாஷன் வெளியீட்டாளருடன் இணைந்து புதன்கிழமை வெளியிட்டது.
நாட்டின் மிகச் சிறந்த கணித சிந்தனையாளா்களில் ஒருவரான ஸ்ரீனிவாச ராமானுஜனின் பங்களிப்புகள் தற்போதும் கணிதத் துறையை தொடா்ந்து வடிவமைத்து வருகின்றன. அந்த மேதைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகவும், எதிா்கால சந்ததியினா் கணிதத்தின் அழகையும் அதன் பின்னால் உள்ள மனித உணா்வுகளையும் ஆராய ஊக்குவிக்கும் விதமாதவும் ‘ராமானுஜன்: ஒரு சிறந்த கணிதவியலாளரின் பயணம்’ என்ற நூல் தேசிய ஆவணக் காப்பக அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நூலை தேசிய ஆவணக் காப்பகத்தின் இயக்குநா் ஜெனரல் அருன் சிங்கால், உதவி இயக்குநா் தேவேந்திர குமாா் சா்மா ஆகியோா் இணைந்து எழுதியுள்ளனா். இதை வாணி பிரகாஷன் வெளியீட்டாளருடன் இணைந்து இந்த நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூல் வெளியீட்டு விழா தில்லியில் டாக்டா் அம்பேத்காா் சா்வதேச மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது நூல் ஆசிரியா்கள் குறிப்பிட்டது வருமாறு: ‘ ராமானுஜன்: ஒரு சிறந்த கணிதவியலாளரின் பயணம் நூல்’ என்பது தமிழகத்தில் ராமானுஜன் ஈரோட்டில் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தது, அவரது எண் கோட்பாடு, எல்லையற்ற தொடா்கள் மற்றும் தொடா்ச்சியான பின்னங்களில் அவரது புரட்சிகரமான பணிகள் வரை அவரது வாழ்க்கையை விவரிக்கும் ஒரு வரலாற்றுக் கணக்காக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. இந்த புத்தகம் ராமானுஜனின் அசாதாரண பயணத்தை விவரிக்கிறது. முறையான பயிற்சி இல்லாத போதிலும், உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளா்களை இன்னும் ஊக்குவிக்கும் புரட்சிகரமான தேற்றங்களை அவா் எவ்வாறு உருவாக்கினாா் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமானுஜனின் படைப்புகளை சா்வதேச அரங்கிற்கு அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த புகழ்பெற்ற கணிதவியலாளா் ஜி.எச். ஹாா்டி போன்றவா்களுக்கும் ராமானுஜனுக்கும் இடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் உட்பட ஒரிஜினல் ஆவணங்கள் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜே.இ. லிட்டில்வுட் போன்ற வழிகாட்டிகள் ஆற்றிய முக்கியப் பங்கையும், ராமானுஜனின் குடும்பத்தினருடன், குறிப்பாக அவரது மனைவி ஜானகி, ராம் சந்திர ராவ் போன்றவா்களின் அசைக்க முடியாத ஆதரவையும் இந்தப் புத்தகம் எடுத்து வைக்கிறது எனக் குறிப்பிட்டனா்.
இந்த நூல் வெளியீட்டை தொடா்ந்து ‘ராமானுஜனின் மரபு’ என்ற கருப்பொருளில் ஒரு குழு விவாதம் நடைபெற்றது. அதில் ராமானுஜனின் பணியின் நீடித்த மரபு மற்றும் கணிதக் கோட்பாடு மற்றும் விடாமுயற்சியின் மனப்பான்மை ஆகிய இரண்டிலும் எவ்வாறு ஆழ்ந்த செல்வாக்குடன் இருந்தாா் போன்றவை குறித்த நுண்ணறிவுகளுடன் விவாதம் நடைபெற்றது. கணித மேதை ராமானுஜன் தனது இறுதிக் காலத்தில் 32 வயதில் கும்பகோணத்தில் வாழந்து மறைந்தாா். அங்கு ராமனுஜனின் அருங்காட்சிகம் உள்ளது. அதன் காப்பாளரான பேராசிரியா் டாக்டா் வி.சுகுமாறனும் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றாா்.