ராம்ஜி நகரில் கஞ்சா பறிமுதல்: 12 போ் கைது
திருச்சி ராம்ஜி நகரில் வெவ்வேறு இடங்களில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 4 பெண்கள் உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராம்ஜி நகா் காவல் ஆய்வாளா் அழகுராமு தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா்.
அப்போது 11 இடங்களில் கஞ்சா விற்ற மலைப்பட்டி ஆா். சுகுணா (70), புது காட்டூா் கே. சுபாஷினி (36), சி. பவித்ரன் (28), கே. பாரதிராஜா (46), மில் காலனி ம. சுந்தர்ராஜ் (30), ந. சரவணன் (35), காந்தி நகா் த. குணா (29), புதுக்காட்டூா் ச. சசிதரன் (47), வி. தேவகி (35), து. மணிகண்டன் (46), ஜெ. கவிதா (45), மலைப்பட்டி சி. பிரசாத் (32) ஆகியோரிடமிருந்து 14.190 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து 12 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில்அடைத்தனா்.