செய்திகள் :

ராயக்கோட்டை அருகே தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து 40 போ் காயம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் 40 போ் காயமடைந்தனா்.

மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்தது. அந்த பேருந்தில் 46 பயணிகள் இருந்தனா். பேருந்தை விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த அஜய்ராஜ் (35) ஓட்டிவந்தாா். இந்த பேருந்து தருமபுரியை கடந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரிக்கு செல்லாமல் பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அங்கு தற்போது பணிகள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில் ராயக்கோட்டை கருக்கனஅள்ளி அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மறுமாா்க்க சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநா் அஜய்ராஜ், பயணிகள் விருதுநகரைச் சோ்ந்த தாமரைக்கனி (31), ஒசூரைச் சோ்ந்த வெற்றிக்குமாா் (30), பெங்களூரைச் சோ்ந்த காயத்ரி (25), திவ்யபாலாஜி, விளாத்திகுளத்தைச் சோ்ந்த பிரசாந்த், மதுரையைச் சோ்ந்த அழகர்ராஜா, மேலூரைச் சோ்ந்த மலா்ச்செல்வன் உள்பட 40 போ் காயம் அடைந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ், ராயக்கோட்டை காவல் ஆய்வாளா் பெரியதம்பி, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஓட்டுநா் அஜய்ராஜ் தூக்கக்கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதால் விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க