செய்திகள் :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4-வது காலாண்டு வருவாய் உயர்வு!

post image

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு மற்றும் ஆண்டு முழுவதுக்குமான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ப்ளூ-சிப் பங்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.2 சதவிகிதம் உயர்ந்து தேசிய பங்குச் சந்தையில், பங்குக்கு ஒன்றுக்கு ரூ.1,398.9 ஆக நிலைபெற்றது. அதே வேளையில் மும்பை பங்குச் சந்தையில் இது 2.77 சதவிகிதம் உயர்ந்து அதிகபட்சமாக ரூ.1406.4 ஆக உயர்ந்தது முடிந்தது.

நிறுவனத்தின் 4-வது காலாண்டு செயல்திறன்

2024 - 25 நிதியாண்டின் 4-வது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 22,611 கோடியாகவும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.21,243 கோடியாக இருந்தது. காலாண்டின் செயல்பாடுகளிலிருந்து நிறுவனத்தின் வருவாய் ரூ.2,61,388 கோடியாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் வருவாய் ரூ.2,36,533 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செயல்திறன்

2024-25 நிதியாண்டில், நிறுவனமானது மிக உயர்ந்த வருடாந்திர ஒருங்கிணைந்த வருவாயாக ரூ.9,64,693 கோடியை பதிவு செய்தது. இது 7.30% ஆண்டு வளர்ச்சி.

ஈவுத்தொகை அறிவிப்பு

பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 2025 ஆம் நிதியாண்டில் தலா ரூ.10/- மதிப்புள்ள ஒரு பங்கு ஒன்றுக்கு ரூ.5.50 இறுதி ஈவுத்தொகையாக இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிக்க: பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம்.. மெர்ஸிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ!

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் வகையில் மெர்ஸிடிஸின் புதிய செடான் இவி காரை அறிமுகம் செய்யவிருக்கிறது மெர்ஸிடிஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் மீட்சி மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 85.25 ஆக முடிந்தது.... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

மும்பை: புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஓரளவு உயர்ந்தன. இருப்பி... மேலும் பார்க்க

ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா? மே 1 முதல் புதிய கட்டணம்!

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் மாற்றம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.வழக்கமாக ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் நகரமாக இருந்தால் கட்டணமின்றி மூன்று முற... மேலும் பார்க்க

ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!!

பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 29) ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,396.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால... மேலும் பார்க்க