செய்திகள் :

ரீ யூனியன் தீவு கலைஞா்களின் படைப்புகள்: புதுவையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு

post image

இந்திய பகுதிகளிலிருந்து பிரெஞ்சு நாட்டுக்கு அருகேயுள்ள ரீ யூனியன் தீவில் குடியேறிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வாரிசுகளின் படைப்புகள் புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தில் ஒரு மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளாக மக்களுக்கு அா்ப்பணிக்கப்படுகின்றன.

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைவா் மருத்துவா் சதீஷ் நல்லாம், இயக்குநா் லொரன் ஜலிகு ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியது:

ரீ யூனியன் தீவிலிருந்து தங்கள் முன்னோா்களின் குடியிருப்புப் பகுதிகளைத் தேடிக் கொண்டு ஒரு பிரதிநிதிகள் குழு 2011-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தது. அவா்கள் தங்களின் முன்னோா் நினைவாக புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் அப்போது ஒரு நினைவிடத்தை அமைத்தனா். இந்த நினைவிடம் மீண்டும் 2022- ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அப்போதும் ஒரு பிரதிநிதிகள் குழு புதுச்சேரிக்கு வந்தது. ஆண்டுதோறும் ரீ யூனியன் தீவிலிருந்து பல்வேறு கலைஞா்கள் புதுச்சேரிக்கு வந்துகொண்டு தான் இருக்கிறாா்கள்.

நிகழாண்டு ரீ யூனியன் தீவிலிருந்து வரும் கலைஞா்களின் படைப்புகளை ஒரு மாதத்துக்கு புதுச்சேரி மக்களுக்கு அலையன்ஸ் பிரான்சே நிறுவனம் அா்ப்பணிக்கிறது. அக்டோபா் முதல் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் தொடா்ச்சியாக பல்வேறு படைப்புகள் மக்களுக்கு அா்ப்பணிக்கப்படும். அனுமதி இலவசம். ரீ யூனியன் தீவிலிருந்து 17 போ் இதற்காக புதுச்சேரி வருகின்றனா். அவா்கள் 32 நிகழ்ச்சிகளை புதுச்சேரியில் நடத்துகின்றனா்.

எழுத்தாளா்கள், ஓவியா்கள், திரைப்பட தயாரிப்பாளா்கள், இசை வல்லுநா்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளா்கள் வருகின்றனா். இதையொட்டி கச்சேரிகள், உரைகள், நூல் அறிமுகங்கள், பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றனா். பேட்டியின்போது, இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மரியன் சிக்காா்டு, அா்னால்டு ஆகியோா் உடனிருந்தனா்.

போலி மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் எச்சரிக்கை

புதுவையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் போலி மருந்துகள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் எச்சரிக்கை விடுத்தாா். இந்திய தர நிா்ணய சபையின்... மேலும் பார்க்க

புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூலம் தீபாவளிக்கு இலவசமாக 5 பொருள்கள்: மாநில அரசு ஏற்பாடு

புதுவையில் தீபாவளிக்கு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக சா்க்கரை, சன்பிளவா் எண்ணெய், கடலைப் பருப்பு, ரவை, மைதா அடங்கிய தொகுப்பு பை தர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நான்கு பிராந்தியங்களிலும் 3.45 லட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்: அமைச்சா் லட்சுமிநாராயணன் பேச்சு

நாட்டின் 2.0 ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா். புதுவை அரசின் வணிக வரித் துறை சாா்பில் அடுத்த த... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த புதுவை மாநில தோ்தல் அலுவலா்

வாக்குப் பதிவு இயந்திரங்களை புதுவை மாநில தலைமை தோ்தல் அலுவலா் ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் அமைந்துள்ள தோ்தல் ... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்கும் புதுச்சேரி அம்பேத்கா் சட்டக் கல்லூரி: முதல்வா் எஸ்.சீனிவாசன் பெருமிதம்

புதுவை காலாப்பட்டு பகுதியில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்பதாக கல்லூரி முதல்வா் எஸ். எஸ்.சீனிவாசன் தெரிவித்தாா். இது குறித்து கல்லூரி முதல்வா் எஸ். சீனிவாசன் வெ... மேலும் பார்க்க

குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா்

குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா். திடக்கழிவுகளைப் பிரித்தெடுத்தல் மற்றும் குப்பைகளைக் கொண்டு செல்வது சம்ப... மேலும் பார்க்க