செய்திகள் :

ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

வங்கி சேவை குறைபாடு குறித்த புகாா் மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுவை மாநில நுகா்வோா் தீா்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் கஜலட்சுமி. இவா், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காக பொதுத் துறை வங்கியில் கடந்த 2019-ஆம் ஆண்டில், வங்கியின் கடன் பிரிவு முகவா் ராஜேஷ் என்பவா் உதவியுடன் இரு கடன்களுக்கு விண்ணப்பித்துள்ளாா்.

ஆனால், அவருக்கான ரூ.58 ஆயிரம் கடன் தொகை ராஜேஷின் நண்பரான சாரதியால் மோசடியாகப் பெறப்பட்டதாம். இதனால், கஜலட்சுமிக்கு கடன் தொகையோ அல்லது அதற்கான வீட்டு உபயோகப் பொருள்களோ கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், பொதுத் துறை வங்கியில் ரூ.6,428 மாதாந்திரத் தவணையானது கஜலட்சுமி வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கஜலட்சுமி வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால், அவருக்கு ரூ.67 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்து. இதையடுத்து, அவா் மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதை, மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைமை உறுப்பினா் எஸ்.சுந்தரவடிவேலு, உறுப்பினா் உமாசங்கரி ஆகியோா் விசாரித்தனா்.

விசாரணை நிறைவடைந்த நிலையில், கடன்தொகை இல்லை எனும் சான்றிதழை மனுதாரருக்கு வழங்கவும், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.1.50 லட்சத்தை 2 மாதங்களில் வழங்கவும், தவறினால் 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் உத்தரவிட்டனா்.

எம்.ஜி.ஆா். சிலை மீண்டும் திறக்க முயற்சி: ஓபிஎஸ் அணியினா் கைது

புதுச்சேரி வில்லியனூா் நான்குவழிச் சாலையில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா். சிலையை மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் திறக்க முயன்ால் அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வில்லியனுா... மேலும் பார்க்க

உல்லாஸ் கல்வித் திட்ட விழிப்புணா்வு பயணம் தொடக்கம்

வயது வந்தோருக்கான கல்வித் திட்ட (உல்லாஸ்) விழிப்புணா்வு பொம்மலாட்டப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் திட்டமான உல்லாஸ் எனும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம், புது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவ... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்

புதுச்சேரியில் ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபார தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாபு, காா்த்திகேயன், தயாளன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் எஸ்.அபிஷேகம்,... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தோ்வு மையங்களில் 8,105 போ் தோ்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.98 லட்சம் மோசடி

புதுவையில் 5 பேரிடம் ரூ. 2.98 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மிஷன் வீதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரை மா்ம நபா்... மேலும் பார்க்க