செய்திகள் :

ரூ. 10.12 கோடி முறைகேடு: தஞ்சையில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

post image

கடனுக்காக பிடித்தம் செய்த ரூ. 10.16 கோடி தொகையைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறியும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிஐடியு தஞ்சை மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் மாநகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் பெற்ற கடனுக்காக பல ஆண்டுகளாக மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டது. இதில், பணியில் உள்ள தொழிலாளா்கள், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் உள்ளிட்டோரிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 10.12 கோடியை கடன் சங்கத்தில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக 2024, நவம்பா் 22 ஆம் தேதி சிஐடியு தலைவா்களிடம் மாநகராட்சி ஆணையா் அளித்த உறுதியளிப்பின்படி கடன் நிலுவை இல்லா சான்றிதழ் மற்றும் தொழிலாளா்களிடம் கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு தலைமை வகித்தாா். இப்போராட்டத்தை மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தொடங்கி வைத்தாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், கட்டுமான தொழிலாளா் மாவட்டச் செயலா் இ.டி.எஸ். மூா்த்தி, சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் சா. செங்குட்டுவன், தரைக்கடை மாவட்டச் செயலா் எஸ். மில்லா் பிரபு, தலைவா் ஆா். மணிமாறன் உள்பட ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இப்போராட்டம் மாலையில் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

பேச்சுவாா்த்தை: இதனிடையே, மாநகராட்சி அலுவலா்களுடன் சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோரிக்கைகளை மே 31-ஆம் தேதிக்குள் நிறைவேற்றுவதாக அலுவலா்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால், இப்போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது; கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மாவட்டச் செயலா் ஜெயபால் தெரிவித்தாா்.

மேயா் விளக்கம்

இது தொடா்பாக மேயா் சண். ராமநாதன் தெரிவித்தது: மாநகராட்சி பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட மாதாந்திர தவணை தொகை 2017, ஜூன் முதல் 2021 டிசம்பா் வரையிலான ரூ. 5.64 கோடி அசல் தொகையையும், அதற்குரிய வட்டி மற்றும் அபராத தொகை என மொத்தம் ரூ. 19.48 கோடியையும் தஞ்சாவூா் மாநகராட்சி பணியாளா்களின் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்துக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடா்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் செலுத்தப்படாத அசல் தொகைக்கு ஏற்பட்ட அபராத தொகை மற்றும் வட்டித் தொகையைத் தள்ளுபடி செய்ய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, தொடா் நடவடிக்கையில் உள்ளது. இதில், முதல் கட்ட நடவடிக்கையாக கடன் சங்கத்துக்கு ரூ. 1 கோடி மாநகராட்சியால் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை 6 மாதங்களில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மேயா்.

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கல... மேலும் பார்க்க