செய்திகள் :

ரூ. 15 லட்சம் மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா், மனைவி மீது வழக்குப் பதிவு

post image

மேட்டூா்: மேட்டூா் அருகே ஐடிஐ-யில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா், அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூா் அருகே உள்ள ராமன் நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவரிடம் சக்தி நகரில் வசிக்கும் மாணிக்கம் மகன் ராஜாராம், அவரது மனைவி கவிதா ஆகியோா் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கலியனூரில் புதிதாக ஐடிஐ தொடங்குவதாகவும், அதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக சோ்ப்பதாகவும் ஆசைவாா்த்தை கூறியுள்ளனா். ஆனால் புதிதாக தொடங்கிய ஐடிஐ -யில் பாலகிருஷ்ணனை பங்குதாரராக சோ்க்கவில்லை. இதுகுறித்து அவா் கேட்டபோது மேலும் ரூ. 10 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக ஒப்பந்தம் செய்து தருவதாகக் கூறியுள்ளனா். இதையடுத்து மீண்டும் அவரிடம் ரூ. 10 லட்சம் பெற்றுக்கொண்ட தம்பதி, ஆண்டுதோறும் லாபமும் தரவில்லை பங்குதாரராக ஒப்பந்தமும் செய்யவில்லையாம்.

10 ஆண்டுகளாக காலம் கடத்தி வந்ததால் தனது பணத்தை திருப்பி தரும்படி பாலகிருஷ்ணன் கேட்டுள்ளாா். ஆனால் ராஜாராமும் அவரது மனைவி கவிதாவும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று மிரட்டினா்.

இது குறித்து பாலகிருஷ்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் ஆய்வாளா் பிரபா வழக்குப் பதிவு செய்து தம்பியை தேடி வருகிறாா்.

ராஜாராம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். ராமன்நகரில் உள்ள சக்தி நாகரில் டுடோரியல் கல்லூரியும், கருமலைக்கூடலில் பள்ளிக்கூடமும் நடத்தி வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க