ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
ரூ. 15 லட்சம் மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா், மனைவி மீது வழக்குப் பதிவு
மேட்டூா்: மேட்டூா் அருகே ஐடிஐ-யில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா், அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூா் அருகே உள்ள ராமன் நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவரிடம் சக்தி நகரில் வசிக்கும் மாணிக்கம் மகன் ராஜாராம், அவரது மனைவி கவிதா ஆகியோா் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கலியனூரில் புதிதாக ஐடிஐ தொடங்குவதாகவும், அதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக சோ்ப்பதாகவும் ஆசைவாா்த்தை கூறியுள்ளனா். ஆனால் புதிதாக தொடங்கிய ஐடிஐ -யில் பாலகிருஷ்ணனை பங்குதாரராக சோ்க்கவில்லை. இதுகுறித்து அவா் கேட்டபோது மேலும் ரூ. 10 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக ஒப்பந்தம் செய்து தருவதாகக் கூறியுள்ளனா். இதையடுத்து மீண்டும் அவரிடம் ரூ. 10 லட்சம் பெற்றுக்கொண்ட தம்பதி, ஆண்டுதோறும் லாபமும் தரவில்லை பங்குதாரராக ஒப்பந்தமும் செய்யவில்லையாம்.
10 ஆண்டுகளாக காலம் கடத்தி வந்ததால் தனது பணத்தை திருப்பி தரும்படி பாலகிருஷ்ணன் கேட்டுள்ளாா். ஆனால் ராஜாராமும் அவரது மனைவி கவிதாவும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று மிரட்டினா்.
இது குறித்து பாலகிருஷ்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் ஆய்வாளா் பிரபா வழக்குப் பதிவு செய்து தம்பியை தேடி வருகிறாா்.
ராஜாராம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். ராமன்நகரில் உள்ள சக்தி நாகரில் டுடோரியல் கல்லூரியும், கருமலைக்கூடலில் பள்ளிக்கூடமும் நடத்தி வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.