செய்திகள் :

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

post image

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் கலகப்பா என்பவரின் வீட்டில் லோக்ஆயுக்தா புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, கலகப்பாவிடமிருந்து கணக்கில் வராத ரூ. 30 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், மாத சம்பளமாக வெறும் ரூ. 15,000 மட்டுமே பெற்றுவந்த கலகப்பாவிடம் 24 வீடுகள், 4 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 4 வாகனங்கள், 350 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சொத்துகள் அனைத்தும் கலகப்பா, அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலகப்பாவும் முன்னாள் பொறியாளரான சின்சோல்கர் என்பவரும் சேர்ந்து, முழுமையடையாத 96 திட்டங்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, அதன்மூலம் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்துள்ளனர்.

Former Karnataka clerk with a salary of ₹15,000 found to own ₹30 crore in assets

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

கடவுள் சிவனின் ஆக்ரோஷமான ருத்ர தாண்டவத்தை, இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தன்னுடைய ருத்ர தாண்ட... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார். வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ... மேலும் பார்க்க

நான் ராஜாவாக விரும்பவில்லை: ராகுல் பதில்! நிகழ்ச்சியில் ருசிகரம்!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அந்த முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.புது தில்லியில் ... மேலும் பார்க்க

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் தில்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாக மாநில அமைச்சர் இர்பான் அன்சாரி த... மேலும் பார்க்க

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

எப்போதும் தொண்டர் படைசூழ, பாதுகாவலர்களின் உதவியோடு வெளியே வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று நீதிமன்றத்தில் தனியாகவே காணப்பட்டார்.பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிர... மேலும் பார்க்க