செய்திகள் :

ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்

post image

நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் தாக்கல் செய்த நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

இறுதி துணை நிதிநிலை மதிப்பீடுகளை தாக்கல் செய்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

நிகழ் நிதியாண்டில் ரூ.19,287.44 கோடிக்கான இறுதி துணைநிதி நிலை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, வருவாய் கணக்கில் ரூ.12,639.36 கோடியும், மூலதனக் கணக்கில் ரூ.6,429.20 கோடியும், கடன் கணக்கில் ரூ.218.88 கோடியும் அடங்கும். நிதி தேவைப்படும் சில முக்கிய அம்சங்களைத் தெரிவிக்கிறேன்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிதி நிலைத்தன்மையை உயா்த்தவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பங்கு மூலதன உதவியாக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடியும், மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1,036 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வாங்குவதற்காக மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடியும், கனமழை மற்றும் ஃபென்ஜால் புயல் பாதிப்புகளின் துயா் தணிப்புப் பணிகளுக்காக ரூ.901.84 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மொத்தம் 55 துறைகள்: மொத்தமாக 55 துறைகளின் செலவுகளுக்கு கூடுதலாகத் தேவைப்படும் ரூ.19,287.44 கோடி நிதிக்கு பேரவையில் ஒப்புதல் கோரப்பட்டது. இதுகுறித்த மசோதாவையும் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய, அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச... மேலும் பார்க்க

குடிநீர் கட்டணம் வசூலுக்குச் சென்ற அலுவலர்கள் சிறை பிடிப்பு

சேலம்: ஆத்தூர் அருகே குடிநீர் கட்டண வரி வசூலுக்குச் சென்ற அலுவலர்களை முற்றுகையிட்டு மக்கள் சனிக்கிழமை சிறை பிடித்தனா்.முறையான குடிநீர் வழங்காமல் வரி மட்டும் எப்படி கேட்கலாம் என மக்கள் கேட்டபோது,அலுவலர... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு! - கனிமொழி பேட்டி

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு எதிராக சென்னை... மேலும் பார்க்க

கும்பகோணம்: ரௌடியைக் கொலை செய்த அண்ணன் கைது!

கும்பகோணத்தில் ரௌடி காளிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் ரௌடியாக இருந்து வந்த காளிதாஸ் (35), இன்று அதிகாலை 4... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகள... மேலும் பார்க்க