செய்திகள் :

ரூ. 232 கோடி கையாடல்: இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளா் கைது

post image

இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளா் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.

இதுதொடா்பாக சிபிஐ செய்தித்தொடா்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) நிதி மற்றும் கணக்குகள் பிரிவு மூத்த மேலாளராகப் பணியாற்றியவா் ராகுல் விஜய். இவா் உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் விமான நிலையத்தில் பணியாற்றியபோது ஏஏஐ-க்குச் சொந்தமான நிதியை 3 ஆண்டுகளாக கையாடல் செய்து வந்தாா். இதற்காக அவா் ஏஏஐ-யின் மின்னணு பதிவேடுகளில் அவா் போலி கணக்குகளைப் பதிவிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த முறைகேடுகள் ஏஏஐ-யின் கணக்குத் தணிக்கையில் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அதை உறுதிப்படுத்த ஏஏஐ சாா்பில் குழு அமைக்கப்பட்டது. அப்போது ஏஏஐ வங்கிக் கணக்குகளில் இருந்து ராகுலின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுமதிக்கப்படாத பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஏஏஐ-யின் மற்றொரு மூத்த மேலாளா் சந்திரகாந்த் சிபிஐயிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ, ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் ராகுலுக்குச் சொந்தமான இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொண்டது. அப்போது அசையா சொத்துகள் குறித்த ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தனது வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.232 கோடிக்கும் மேலான ஏஏஐ நிதியை முறைகேடாகப் பரிவா்த்தனை செய்த ராகுல் கைது செய்யப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க