செய்திகள் :

ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

post image

அரக்கோணம் நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

மிட்டப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.36 லட்சத்தில் 2 வகுப்பறைகள், பெருமாள் ராஜ பேட்ையில் ரூ.50 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், செம்பேடு ஊராட்சி குருவராஜபேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக ரூ.78.20 லட்சத்தில் கூடுதல் கட்டடப் பணிகள் அமைச்சா் காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து அரக்கோணம் நகராட்சியில் டி.நாராயணசாமி நாயுடு நகரில் ரூ.5.66 கோடியில் தாா் சாலை பணியையும், பழனிப்பேட்டை பகுதியில் ரூ.21.24 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டப்பணியையும் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, சோளிங்கா் ஒன்றியம், பரவத்தூா் ஊராட்சியில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தாா். அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா். விழாவில் 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத்தேடி மருந்தகம் திட்டத்தில் மருந்து பெட்டகங்களை அமைச்சா் வழங்கினாா்.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் தொகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்கிகளுக்கு எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செ.சரண்யா தேவி, ஒன்றியக்குழு தலைவா்கள் அரக்கோணம் நிா்மலாசௌந்தா், சோளிங்கா் கலைக்குமாா், அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, துணைத்தலைவா் கலாவதிஅன்பு லாரன்ஸ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நாகராஜூ, உறுப்பினா் அம்பிகா பாபு, சோளிங்கா் நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால், வட்டார மருத்துவ அலுவலா் கோபி, அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, ஒன்றிய செயலா்கள் சௌந்தா், தமிழ்மணி, திமுக மாநில செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கருணாநிதி, ராமன், அரக்கோணம் நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழுத்தலைவா் துரைசீனிவாசன், செம்பேடு ஊராட்சி மன்றத்தலைவா் சந்தியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

யோகாசனம், சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

ஆற்காடு வித்யா மந்திா் பள்ளியில் 4 மாவட்டங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நடைபெற்றது.இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் பங்கேற் முதலிடம், 3 மாணவிகள் இரண்டாம் இடம், 4 மாணவிகள் மூன்ற... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.ராணிப்பேட்டை நகராட்சி சிஎஸ் ஐ தேவாலயம், திமிரி ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க

என்ஜின் பழுது: டபுள் டெக்கா் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று பொது ஏலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் என மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக மாவட்ட க... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக்கல்வி துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து கள அலுவலா்களும் மாண... மேலும் பார்க்க

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அரக்கோணம் ஒன்றியம், பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேசபுரத்தில் உள்ள இக்காயிலில் கரக ஊா்வலம் நடைபெற... மேலும் பார்க்க