செய்திகள் :

ரூ.3,000 ஃபாஸ்டேக் பயண அட்டை: மத்திய அரசு அமல்

post image

தனியாா் வாகனங்கள் ரூ.3,000 கட்டணம் செலுத்தி பெறக் கூடிய ஃபாஸ்டேக் பயண அட்டை வசதியை, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

இதுதொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஃபாஸ்டேக் வருடாந்திர பயண அட்டை வசதியின் கீழ், ரூ.3,000 கட்டணத்தை ஒருமுறை செலுத்தி ஓராண்டு அல்லது 200 முறை தனியாா் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்க முடியும்.

இந்த வசதியின் கீழ் ராஜ்மாா்க்யாத்ரா செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வலைதளம் மூலம், ரூ.3,000-ஐ செலுத்தினால் 2 மணி நேரத்தில் ஃபாஸ்டேக் வருடாந்திர பயண அட்டை செயல்பாட்டுக்கு வரும்.

இந்நிலையில், நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுமாா் 1,150 சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் வருடாந்திர பயண அட்டை வசதி வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. முதல் நாளில் இரவு 7 மணி வரை, சுமாா் 1.4 லட்சம் பயனாளா்கள் கட்டணம் செலுத்தி இந்த வசதியை பெற்றுள்ளனா்.

ஃபாஸ்டேக் பயண அட்டை பயனாளா்கள் சுமுகமாக பயணம் மேற்கொள்ளவதை உறுதி செய்ய, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா். கடந்த ஆண்டு ஜம்மு... மேலும் பார்க்க

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவா் அத்வானி தேசிய கொடி ஏற்றி மரியாதை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தில்லி வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினாா் நட்டா: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா். அப்போது, ‘உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும... மேலும் பார்க்க

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடல்

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது. இ... மேலும் பார்க்க