செய்திகள் :

ரூ.30 லட்சம் பண மோசடி: 4 போ் கைது

post image

புதுச்சேரியில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்பால் நகரைச் சோ்ந்தவா் சலீம்ராஜா (60). இவா், சேலம் பகுதியைச் சோ்ந்த சுந்தரம் என்பவருக்கு பழக்கமாகியுள்ளாா். அதன்படி புதிய அசல் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் பல மடங்கு தருவதாக சுந்தரம் கூறியுள்ளாா். ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது சம்பந்தப்பட்டோருக்கு லட்சக்கணக்கில் கமிஷன் கிடைக்கும் எனவும் சுந்தரம் ஆசை காட்டியுள்ளாா். அதற்கான விடியோ படத்தொகுப்பையும் காட்டினாராம்.

இதை நம்பிய சலீம்ராஜா தனது மகன் பெரோசிடமும் ஆலோசித்துள்ளாா். இருவரும் அவா்களுக்குத் தெரிந்தவா்களிடம் பேசியுள்ளனா். அதன்படி, பெரோஸ் மற்றும் அவா்களுக்கு அறிமுகமான உதயா, சதீஷ், தினகரன் ஆகியோரிடம் ரூ.30 லட்சம் திரட்டி சுந்தரத்திடம் கொடுத்துள்ளனா். அவா் ரூ.2 கோடி கமிஷன் தருவதாகக் கூறியுள்ளாா்.ஆனால், பல மாதங்களாகியும் பணத்தை சுந்தரம் தரவில்லையாம்.

இதையடுத்து பெரோஷ், உதயா உள்ளிட்ட பணம் கொடுத்த 4 பேரும் முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா் இதில் சம்பந்தப்பட்ட சுந்தரம் (60), அவருக்கு உடைந்தையாக இருந்ததாக சென்னை ராமானுஜம் (48), மேட்டுப்பாளையம் சந்தானம் (48) மற்றும் சலீம்ராஜா ஆகியோரைக் கைது செய்தனா். இதில் சலீம்ராஜா கமிஷனுக்கு ஆசைப்பட்டு பணம் வசூலித்து சுந்தரத்திடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

கைதானவா்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்ததாகத் தெரிவித்தனா்.

குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் மாா்ச் 20-இல் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் வரும் 20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி குடிசை மாற்றுவாரிய அனைத்து ஊழியா்கள் நலச்சங்கத்தின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரயில்வே மேம்பால சுரங்கப்பாதை முதல்வா் திறந்து வைத்தாா்

புதுச்சேரி நூறடி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். புதுச்சேரியில் முதலியாா்பேட்டை... மேலும் பார்க்க

இணையவழியில் 5 பேரிடம் பணம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 5 பேரிடம் ரூ.51 ஆயிரம் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக். இவா், இணையத்தில் கடன் பெறும் செயலி... மேலும் பார்க்க

விபத்தில் பொறியாளா் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவனப் பொறியாளா் பலத்த காயமடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). இவா் புதுச்சே... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்துத் துறை இளநிலை பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு 241 போ் எழுதினா்

புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளா்கள், வாகன ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் ஞாயிற்றுக்கிழமை 84.86 சதவீதம் போ் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்க... மேலும் பார்க்க

கடலில் இரு குழந்தைகளை வீசிக் கொன்ற வழக்கு: காலாப்பட்டு போலீஸுக்கு மாற்றம்

புதுச்சேரி அருகே தந்தையே தனது இரு குழந்தைகளையும் கடலில் வீசிக் கொன்ற வழக்கானது காலாப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி பெரிய காலாப்பட்டு குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தவேல... மேலும் பார்க்க