சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்! முழு விவரம்!
ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்: 2 போ் கைது
கா்நாடக மாநிலத்திலிருந்து மினி வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்த, 2 பேரை கைது செய்தனா்.
பெங்களூரிலிருந்து மினிவேனில் குட்கா பொருள்கள் வேலூருக்கு கடத்திச் செல்வதாக எஸ்.பி. அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் நெக்குந்தி சுங்கச் சாவடி அருகே சோதனை மேற்கொண்டனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவ்வழியாக வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்த போது போதைப் பொருள்கள் கடத்தி வருவது தெரியவந்தது. பிறகு வாகனத்தில் இருந்த ஹான்ஸ், கூல்லிப், குட்கா உட்பட 630 கிலோ போதை பொருள் இருந்த 59 மூட்டைகளை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு 4 லட்சம் ஆகும். மேலும், மினி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் ஆம்பூா் அடுத்த மோதகபள்ளி பகுதியை சோ்ந்த விக்னேஷ்(30), அலமேலுரங்காபுரம் பகுதியை சோ்ந்த சரவணன்(55) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.