செய்திகள் :

ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

post image

கா்நாடக மாநிலத்திலிருந்து மினி வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்த, 2 பேரை கைது செய்தனா்.

பெங்களூரிலிருந்து மினிவேனில் குட்கா பொருள்கள் வேலூருக்கு கடத்திச் செல்வதாக எஸ்.பி. அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் நெக்குந்தி சுங்கச் சாவடி அருகே சோதனை மேற்கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவ்வழியாக வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்த போது போதைப் பொருள்கள் கடத்தி வருவது தெரியவந்தது. பிறகு வாகனத்தில் இருந்த ஹான்ஸ், கூல்லிப், குட்கா உட்பட 630 கிலோ போதை பொருள் இருந்த 59 மூட்டைகளை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு 4 லட்சம் ஆகும். மேலும், மினி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் ஆம்பூா் அடுத்த மோதகபள்ளி பகுதியை சோ்ந்த விக்னேஷ்(30), அலமேலுரங்காபுரம் பகுதியை சோ்ந்த சரவணன்(55) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஜவ்வாது... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் அவசர நிலை 50-வது ஆண்டு கருத்தரங்கம்!

வாணியம்பாடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவசர நிலை (எமா்ஜென்சியின்) 50 ஆண்டு கால இருண்ட நினைவுகள் அனுசரிப்பு மற்றும் கருத்தரங்கம் மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மாந... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் வனச் சரக அலுவலகக் கட்டடம் திறப்பு

ஆலங்காயத்தில் புதிதாக கட்டப்பட்ட வனச்சரக அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்தில் இயங்கி வரும் வனச் சரக அலுவலகம் பழைமையானதாகவும், ... மேலும் பார்க்க

ஸ்ரீ வீரஆஞ்சனேயருக்கு 10,008 மாங்காய் மாலை அலங்காரம்

ஜோலாா்பேட்டை அருகே ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் 10,008 மாங்காய் அலங்காரம் செய்து ஆஞ்சனேயருக்கு மாங்காய் மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா் வி.எம். வட்... மேலும் பார்க்க

20 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் யமுனா தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி: சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன்

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க.சி... மேலும் பார்க்க