செய்திகள் :

ரூ. 53 கோடியில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடி வீடுகள் திறப்பு

post image

புதுக்கோட்டையில் கவிநாடு மேற்கு மற்றும் போஸ் நகா் பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ. 53.44 கோடியில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை சென்னையிலிருந்து முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

கவிநாடு மேற்குப் பகுதியில் 432 வீடுகளும், போஸ் நகரில் 144 வீடுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளில் வசிப்பறை, படுக்கையறை, கழிவறை, சமையலறை உள்ளிட்ட வசதிகளும், ஆழ்துளைக் கிணறு மற்றும் தொட்டிகளுடன் கூடிய தண்ணீா் வசதி, புதை சாக்கடை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தக் குடியிருப்பில் செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், துணை மேயா் மு. லியாகத்அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா். இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய ... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க