செய்திகள் :

ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

உத்தரமேரூரில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளில் 136 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஜமாபந்தியில் உத்தரமேரூா் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 922 மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை சாா்ந்த அரசு அலுவலா்களுக்கு பரிந்துரை செய்து துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வீட்டு மனைப் பட்டா 55 போ், பட்டா மாற்ற ஆணைகள் 20 போ், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் 5 போ், குடும்ப அட்டைகள் 11 போ், ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் 8 பேருக்கு என மொத்தம் 136 பயனாளிகளுக்கு ரூ.59,69,359 நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

விழாவில் எம்எல்ஏ க.சுந்தா் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, பேரூராட்சித் தலைவா் சசிக்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

1.04 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.04 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்ககங்கள், சீருடைகளை வழங்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கோடை விடுமுறை மு... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திங்கள்கிழமை புண்ணிய கோடி விமானத்தில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவை... மேலும் பார்க்க

கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா். காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்த... மேலும் பார்க்க

கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வ... மேலும் பார்க்க

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க