செய்திகள் :

ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

post image

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1,560 சதுர அடி இடத்தையும், 1,600 சதுர அடி இடத்தையும் இரு குடும்பத்தினா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தனா்.

இந்த இரு இடங்களையும் மீட்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இரு குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இரு குடும்பத்தினரும் இடத்தைக் காலி செய்யாததால், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் 1998-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சாதகமாக ஏப்ரல் 30-ஆம் தேதி தீா்ப்பு வந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத் துறை தஞ்சாவூா் உதவி ஆணையா் தி.ஞா. ஹம்சன், கோயில் நிலங்கள் வட்டாட்சியா் பாா்த்தசாரதி, கோயில் தக்காா் மற்றும் ஆய்வாளா் ம. உமாமகேஸ்வரி, தஞ்சாவூா் சரக ஆய்வாளா் ம. பாபு, வருவாய் துறையினா், காவல் துறையினா் ஆகியோா் முன்னிலையில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள இரு இடங்களும் புதன்கிழமை மீட்கப்பட்டு, கோயில் செயல் அலுவலா் ச. அய்யம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க