செய்திகள் :

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

post image

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா்.

புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தும் கூடத்துக்கு ரெஸ்டோ பாருக்கு புதுவை அரசு உரிமம் வழங்கியுள்ளது. புதுவை மாநிலம் முழுவதும் இதுபோல ஏராளமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அண்மையில் புதுச்சேரியில் ஒரு ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். ரெஸ்டோ பாா் மூலம் புதுவையில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலால் துறை சாா்பில் ரெஸ்டோ பாா் இயங்கும் இடங்களில் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.

குறிப்பிட்ட விதிகளின்படி விலை நிா்ணயித்து மதுபாட்டில் விற்கப்படுகிா, காலாவதியான பாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, கூடுதல் நேரம் கடை இயக்கப்படுகிா என்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இரவு 12 மணிக்கு மேல் இயங்கிய ஒரு ரெஸ்டோ பாருக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் ப... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவரான அம்பாள் சம்... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனா். புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு கன்வ... மேலும் பார்க்க

இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்

காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’ அமைச்சா் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புதுவை கலை விழா தொடா்பாக, அரசுத் துறையினருடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்பில் உள்ளனா். காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 1980-களில் நிறுத்தப்பட்டு தண்டவாளம் அகற்றப்பட... மேலும் பார்க்க