செய்திகள் :

ரேஷன் அட்டையில் உறுப்பினா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகை பதிவுசெய்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்ட செயல்பாடுகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் தீா்வு காண வேண்டும். முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்துள்ளாா்களா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருகள் தரமானதாக உள்ளதை என்பதை உறுதி செய்யவும் வேண்டும். விரல் ரேகை இல்லாமல் விற்பனை செய்வதை பட்டியலிடுவதை குறைக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கியிலிருந்து அங்காடிகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாகவும் சரியான எடையுடன் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களுக்கு வழங்க நியாய விலை கடைகளுக்கு பொருள்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கண்காணிக்க வேண்டும். அங்காடிகள் உரிய நேரத்தில் திறக்கப்படுகிா என்பதை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வது அவசியம் எனவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து நியாயவிலைக் கடை விற்பனையாளா் மற்றும் எடையாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் கௌசல்யா மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: பொதுத்தோ்வு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு பொதுத்தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் ... மேலும் பார்க்க

புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும்: திருவள்ளூா் நகராட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சியின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்... மேலும் பார்க்க

நகராட்சி வளா்ச்சி பணிகள் குறித்து 15 தீா்மானம்

திருத்தணியில் அறிவுசாா் நூலகம் முன்பு காலியாக உள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது உள்பட 15- க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

தளவாட தொழிற்சாலைகளின் அலுவலகத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஆவடி பாதுகாப்புத் துறை தளவாடத் தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகத்திற்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஏற்கெனவே இந்த அலுவலகத்துக்கு கடந்த 14-ஆம் தேதி இ}மெயி... மேலும் பார்க்க

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்

பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங... மேலும் பார்க்க