செய்திகள் :

ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

நாகா்கோவில், புதுகிராமம் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கை தொடங்கியது.

ரோஜாவனம் கல்வி குழுமத்தின் நிறுவனா் புலவா் ரத்தினசாமி வழிகாட்டுதலின் பேரில், பள்ளித் தலைவா் அருள்கண்ணன், துணைத் தலைவா் அருள்ஜோதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டு வரும், இப்பள்ளியில் 2025-26 ஆம் ஆண்டு பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கையை முன்னிட்டு முதல் கட்டமாக மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வு ஏற்கெனவே நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

2 ஆம் கட்ட மாணவா்களுக்கானநுழைவுத் தோ்வு அடுத்த மாதம் (மே) 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கானமுன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிவியல் பிரிவு, கணிதம் பிரிவு, கணினி பிரிவு, வணிகவியல் பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளுக்கும் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

புதிய மாணவா்கள் சோ்க்கை தொடா்பான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா், வகுப்பு ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள் மற்றும் ஆசிரியா்கள் செய்து வருகின்றனா்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் வழக்கமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் நிலவும். நிகழாண்டு நாள்தோறும் ம... மேலும் பார்க்க

குலசேகரம் பகுதியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பறிமுகல் செய்யப்பட்டது. குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் ஆஸ்வால்ட் ஹோப்பா் எழுதிய ‘என் கிணற்றில் நிலா மிதக்குது’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

ஈஸ்டா்: கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி கடந்த 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில்... மேலும் பார்க்க

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இக்கோயி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க