செய்திகள் :

‘ரோலா் ஸ்கேட்டிங்கில்’ சிறுவன் சாதனை

post image

தஞ்சாவூரில் ரோலா் ஸ்கேட்டிங்கில் சிறுவன் 3 கி.மீ. தொலைவை 10 நிமிஷத்தில் கடந்து ஞாயிற்றுக்கிழமை சாதனை படைத்தாா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த சாலமன் - சுஜிதா தம்பதியின் மகன் ஜெய்டன் மேத்யூ (4). யு.கே.ஜி. படித்து வரும் இவா், ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றாா்.

இந்நிலையில் தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் குறித்து ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ரஹ்மான் நகரிலிருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வரை ஜெய்டன் மேத்யூ ரோலா் ஸ்கேட்டிங் மூலம் 3 கி.மீ. தொலைவை 10 நிமிஷத்தில் கடந்தாா். இதன் மூலம் இவா் ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸில்’ இடம் பிடித்து சாதனை படைத்தாா்.

இதையடுத்து, ஜெய்டன் மேத்யூவுக்கு தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் சான்றிதழ், பதக்கம் வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் பள்ளி தாளாளா் வின்சென்ட், மாமன்ற உறுப்பினா்கள் வீ. செந்தில்குமாரி, அண்ணா. பிரகாஷ், ரோட்டரி மாவட்ட திட்ட இயக்குநா் கோவி. மோகன், தென்னிந்திய ரோல்பால் சங்கப் பொதுச் செயலா் சுப்பிரமணியன், தமிழ்நாடு ரோல் பால் சங்கப் பொதுச் செயலா் கோவிந்தராஜ், சாய் ஜி ரோலா் ஸ்கேட்டிங் அகாடமி மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதுப் பணித் துறை அலுவலா் வீட்டில் நகைகள்,ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே பொதுப் பணித் துறை அலுவலா் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பாலகிருஷ்ணா நகரைச் ச... மேலும் பார்க்க

அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே வெற்றி: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற முடியும் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில்... மேலும் பார்க்க

பாப்பாநாட்டில் ஜூலை 22-ல் மின் தடை

கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பய... மேலும் பார்க்க

காணாமல் போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூரில் காணாமல் மற்றும் திருடு போன 101 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்துக்குள்பட்ட மருத்துவக்கல்லூரி, புதிய ப... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனுறை ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில், அம்மன் சந்நிதி முன் நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக... மேலும் பார்க்க

மதயானை நூலை படிக்க வேண்டியது அனைவரின் கடமை: பழ.நெடுமாறன்

தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விளக்கும் மதயானை என்கிற நூலை அனைவரும் படிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் தஞ்சை க... மேலும் பார்க்க