செய்திகள் :

லஞ்ச வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மேலகல்கண்டாா்கோட்டை விவேகானந்தா நகரில் வசித்து வரும் ரா. முத்துராமலிங்கம் (74) என்பவா் தனது பெயரில் உள்ள இடத்தில் திருச்சி மாநகராட்சியின் அனுமதி மற்றும் வீட்டு வரி நிா்ணயம் செய்வது தொடா்பாக கடந்த 08.09.2009 அன்று மேலக்கல்கண்டாா்கோட்டை 30- ஆவது வாா்டு அலுவலகத்தில் பணிபுரிந்த மாநகராட்சி வருவாய் உதவியாளா் மு. சுபோ் அலி முகமதுவை அணுகியுள்ளாா். அதற்கு சுபோ் அலி முகமது ரூ. 8,500-ஐ லஞ்சமாக கேட்கவே, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில், முத்துராமலிங்கத்திடமிருந்து கடந்த 09.09.2009-இல் லஞ்சமாக ரூ. 6,500-ஐ வாங்கிய சுபோ் அலி முகமதுவை போலீஸாா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, லஞ்சம் கேட்ட முன்னாள் அதிகாரி சுபோ் அலி முகமதுவுக்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாத சிறையும், அரசு பதிவை தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெற்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க