செய்திகள் :

"லலித் மோடியின் சுயநலம்..." - ஸ்ரீசாந்த்தை அறைந்த வீடியோ வெளியானது குறித்து ஹர்பஜன்

post image

இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2008-ல், மும்பை vs பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல் போட்டியில் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்த செயல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சம்பவத்துக்குப் பிறகு 11 போட்டிகளில் ஆட ஹர்பஜன் தடைவிதிக்கப்பட்டார்.

மறுபக்கம், ஹர்பஜன் இன்று வரை பல இடங்களில், தான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்றும் அது முழுக்க முழுக்க தன்னுடைய தவறு என்றும் மன்னிப்பு கேட்டு வருகிறார்.

லலித் மோடி
லலித் மோடி

இவ்வாறு அந்த சம்பவத்தை இரு தரப்பினரும் கடந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறையும் வீடியோ 17 வருடங்களுக்குப் பிறகு இப்போது வெளியாகி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கின் `Beyond23 Cricket Podcast' என்ற நிகழ்ச்சியில் ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி கலந்து கொண்டபோது இந்த வீடியோ அதில் ஒளிபரப்பட்டிருக்கிறது.

இதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஸ்வரி, "லலித் மோடி, மைக்கேல் கிளார்க் இருவரும் வெட்கப்பட வேண்டும்.

உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? பழைய காயங்களை மீண்டும் கிளறிவிடுகிறீர்கள்.

ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருக்குமே இப்போது பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் செய்தது அருவருப்பான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்" என்று விமர்சித்தார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

இந்த நிலையில், இன்ஸ்டன்ட் பாலிவுட் ஊடகத்திடம் வீடியோ வெளியானது குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன், "வீடியோ வெளியான விதம் தவறானது. இது நடந்திருக்கக் கூடாது.

இதற்குப் பின்னால் அவர்கள் சுயநல நோக்கம் கொண்டிருக்கலாம். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றை மக்கள் மறந்துவிட்டார்கள்.

அதை மக்களுக்கு அவர்கள் நினைவூட்டுகிறார்கள். என்ன நடந்ததோ அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

இப்போது வீடியோ வைரலாகிவிட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

தவறு செய்துவிட்டேன் என பலமுறை நான் கூறிவிட்டேன். மனிதர்கள் தவறு செய்கிறார்கள், அதில் நானும் தவறு செய்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

"தோனிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்; அவரைப்போல..." - பாக்., மகளிர் அணி கேப்டன் ஓபன்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும்.நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,... மேலும் பார்க்க

IPL-ல் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்; 25 வருட கரியரை முடித்துக் கொண்ட இந்திய சாம்பியன்!

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்க... மேலும் பார்க்க

"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்..." - இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்.கடை... மேலும் பார்க்க

"பேட் கம்மின்ஸ் அப்படி செய்வாரா?" - பும்ரா மீதான பணிச்சுமை விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கேள்வி

கிரிக்கெட் உலகில் தற்போது நம்பர் ஒன் பவுலராக விளங்குபவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா.தனது தனித்துவமான பவுலிங் ஸ்டைலால் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் பும்ராவுக்கு, அந்த பவுலிங் ஸ்டைலே ஆபத்... மேலும் பார்க்க

RCB stampede: "மிகவும் சந்தோஷமான தருணம் துக்கமானதாக மாறிவிட்டது" - கோலி உருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு வழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த சீசனில் கோப்பையை வென்றது.ஆன... மேலும் பார்க்க

Mitchell Starc: ``இதுவே சிறந்த வழி'' - சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 65 T20 போட்டிகளில் வி... மேலும் பார்க்க