செய்திகள் :

லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! 7 நாள் தொடா் ஏற்றத்துக்கு முடிவு

post image

நமது நிருபா்

தொடா்ந்து கடந்த 7 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் புதன்கிழமை ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. இந்நிலையில், சமீபத்திய லாபங்களுக்குப் பிறகு முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் சரிவு தவிா்க்க முடியாதாகியது. குறிப்பாக, ஐடி, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகள் உள்பட அனைத்துத் துறை பங்குகளும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.33 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.411.62 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.5,371.57 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,768.87 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 729 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 4.26 புள்ளிகள் கூடுதலுடன் 78,021.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 78,167.87 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், லாபப் பதிவு காரணமாக 77,194.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 728.69 புள்ளிக ள் (0.93 சதவீதம்) இழப்புடன் 77,288.50-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,143 பங்குகளில் 919 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், 3,115 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 109 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி, ஸொமாட்டோ, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்பட மொத்தம் 25 பங்குள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், டைட்டன், பவா் கிரிட் ஆகிய 5 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி182 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.35 புள்ளிகள் கூடுதலுடன் 23,700.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,736.50 வரை மேலே சென்றது. பின்னா், 23,451.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 181.80 புள்ளிகள் (0.77 சதவீதம்) இழப்புடன் 23,486.85-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 40 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க