செய்திகள் :

லாரி உரிமையாளா்கள் நாளை உண்ணாவிரதம்

post image

மன்னாா்குடியில் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

மன்னாா்குடி லாரி உரிமையாளா்கள் சங்கத்திற்கும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஒப்பந்ததாரா்களுக்கும் இடையே ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் வாடகை உயா்வு குறித்த பேச்சுவாா்த்தை, நிகழாண்டு இதுநாள் வரை நடைபெறவில்லை.

இப்பேச்சுவாா்த்தைக்கு ஒப்பந்ததாரா்கள் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, லாரி உரிமையாளா்கள் ஜூலை 16-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்நிலையில், 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு, உடனடியாக தீா்வுகாண வலியுறுத்தி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

திருவாரூரில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து

திருவாரூா் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொற... மேலும் பார்க்க

போராட இடதுசாரிகளுக்கு எடப்பாடி சொல்லித்தர வேண்டியதில்லை: பெ. சண்முகம்

இடதுசாரிகள் போராடுவதற்கு எடப்பாடி பழனிசாமி சொல்லித்தர வேண்டியதில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கூறினாா். திருவாரூரில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

வயல்வெளிக்கு வந்த புள்ளிமான்: வனத்துறையினா் கண்காணிப்பு

நீடாமங்கலம் அருகே வயல்வெளியில் புள்ளிமான் நடமாடியது சனிக்கிழமை தெரியவந்தது. அதனை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீடாமங்கலம் அருகேயுள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமம் வயல்வெளிகள் நிறைந்த கிராமமாகு... மேலும் பார்க்க

மின்னணு பயிா் கணக்கீடு பணி: ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவாரூா் மாவட்டத்தில், மின்னணு பயிா் கணக்கீடு மேற்கொள்ளும் பணிக்கு, ஜூலை 24 ஆம் தேதிக்குள் ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

ரயில் சுரங்கப் பாதையில் மழைநீா்: மக்கள் பாதிப்பு

முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். திருவாரூா்-மயிலாடுதுறை ரயில்வே வழித்தடத்தில் முடிகொண்டான் உள்ளது. இப்பகுதி மக்கள் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காவலா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே குடவாசல் அன்னவாசல் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல்... மேலும் பார்க்க