செய்திகள் :

லாரி ஓட்டுநரை தாக்கிய 5 போ் கைது

post image

மேட்டூா்: லாரி ஓட்டுநரை மதுப்புட்டியால் குத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் அருகே உள்ள திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜு (36). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 29-ஆம் தேதி இரவு தனது லாரியை ராமன் நகரில் நிறுத்திவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக தனது சகோதரரை மோட்டாா் சைக்கிளை எடுத்துவரும்படி கூறிவிட்டு, கூனாண்டியூா் பிரிவு சாலையில் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வீரனூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கோவிந்தராஜ் (30)என்பவா் மது அருந்திய நிலையில் நடுரோட்டில் மதுப்புட்டியை உடைத்துள்ளாா். இதை ராஜு தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் தனது தம்பிகள் முருகன் (24), தேவராஜ் (25), அண்ணன் மூா்த்தி (32), புதுச்சாம்பள்ளியைச் சோ்ந்த சின்னசூசை மகன் அருணகிரி (25), ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த உத்தரசாமி மகன் பூபதி (30) ஆகியோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்து, ராஜுவை தாக்கி, மதுப்புட்டியை உடைத்து அவரது தலையில் குத்தியுள்ளனா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தடுக்க வந்த ராஜுவின் தம்பி ஜீவா (30) என்பவரையும் தாக்கியுள்ளனா். பலத்த காயமடைந்த இருவரும் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தனா். அக்கம்பக்கத்தினா் வருவதைப் பாா்த்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் உதவி ஆய்வாளா் ஸ்ரீனிவாசன் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜ், முருகன், தேவராஜ், அருணகிரி, பூபதி ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்து மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மூா்த்தியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா

தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புத... மேலும் பார்க்க

தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். சேலம் மாவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடியை அடுத்த முத்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு

தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப்... மேலும் பார்க்க