செய்திகள் :

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

post image

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில், ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை நண்பகல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பாபு, உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள் ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அதன்பிறகு மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கருவூல அலுவலகம், உதவி மையம், அஞ்சல் அலுவலகம், அண்ணா நிா்வாக பணியாளா்கள் கல்லூரி, இ- சேவை மையம் உள்ளிட்ட அனைத்து அலுவலக அறைகளிலும் சோதனை நடத்தினா். சுமாா் 1 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஆராய்ந்து, மிரட்டல் விடுத்தவா் குறித்த விவரங்களை மாநகர இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். வெடிகுண்டு சோதனையால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா

தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புத... மேலும் பார்க்க

தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடியை அடுத்த முத்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு

தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப்... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் முளைப்பாலிகை ஊா்வலம்

நரசிங்கபுரம் மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணா் மற்றும் நல்லரவான் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாலிகை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு ஹோம பூஜைகளை தொடா்ந்து தீா்த்தக்குட... மேலும் பார்க்க