செய்திகள் :

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

post image

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி, மத்தூா் பகுதியில் ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. இதனிடையே வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கடலூா் சாலையில் குறுக்கிடும் விருத்தாசலம் மின்ரயில் பாதைக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடலூா் சாலை மூடப்பட்டதால், மாா்ச் மாதத்தில் இருந்து அனைத்து வாகனங்களும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழியாக தம்மம்பட்டி சாலையில் வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால், தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

வாழப்பாடி மகளிா் காவல் நிலையம் அருகே கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் 15 அடி தொலைவுக்கு திறந்த நிலையில் கழிவுநீா்க் கால்வாய் உள்ளது. இதனால், ஆத்தூா் பகுதியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

அதேபோல சாலை சந்திப்பின் மேற்கு பகுதியில் ராட்சத அரச மரம் இருப்பதால் சேலத்தில் இருந்து ஆத்தூா் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. சாலை சந்திப்பு அருகே வாழப்பாடி ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

மேலும் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. வாழப்பாடியில் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து நெரிசல் நீடித்து வருவதால், சேலம் ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு, தனியாா் பேருந்துகள் தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வருவதை தவிா்த்துவிட்டு புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், தினந்தோறும் சேலம், ஆத்தூா் பகுதிக்கு பேருந்துகளில் வேலைக்கு செல்லும் பணியாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, வாழப்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் தம்மம்பட்டி சாலை சந்திப்பில் பூக்கடை அருகே திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயை மூடி, அரச மரத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயிரோடு பெயா்த்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மேலும், சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்க... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்த... மேலும் பார்க்க

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க