செய்திகள் :

தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் காசி படையாட்சி மகன் கா. சிவக்குமாா் (45). இவா் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், தமையனூா் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 11 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பரமேஸ்வரி வாழப்பாடி வட்டார வள மையத்தில் ஆசிரியா் பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறாா்.

இவரது சிறப்பான பணியை பாராட்டி, நிகழாண்டு தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், வாழப்பாடி துளி, நெஸ்ட் அறக்கட்டளை, இலக்கியப் பேரவை, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்பினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா

தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புத... மேலும் பார்க்க

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். சேலம் மாவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடியை அடுத்த முத்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு

தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப்... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் முளைப்பாலிகை ஊா்வலம்

நரசிங்கபுரம் மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணா் மற்றும் நல்லரவான் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாலிகை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு ஹோம பூஜைகளை தொடா்ந்து தீா்த்தக்குட... மேலும் பார்க்க