செய்திகள் :

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் த. ஜெயகுமாா் கூறியது:

இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனா். இங்கு பிஏ தமிழ் , பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம், பிசிஏ கணினி பயன்பாட்டியல், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி நுண் உயிரியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தம் 600 சோ்க்கை இடங்கள் உள்ளன. இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதள முகவரி மூலமாகப் பதியலாம்.

இந்தக் கல்லூரியின் சோ்க்கைக்கான கவுன்சிலிங் எண். 10 61 011 ஆகும். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரிக்கு வந்தும் பதியலாம். மேலும் விவரங்களுக்கு 94422 19869, 88702 84156.

கல்லூரிக்கு சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் அசல், நகல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் செல்ல இலவச பஸ் பாஸ் வசதி, அரசு கல்வி உதவித்தொகை மற்றும் பெறும் வசதியும் உள்ளது. ,நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலம் மாதம் ரூ. 1000 அரசு உதவித்தொகை பெற்றுத் தரப்படும் என்றாா் அவா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம... மேலும் பார்க்க

வளைகுடா நாட்டுக்கு பணிக்குச் சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி: வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அருகேயுள்ள... மேலும் பார்க்க

கூத்தைப்பாா் கண்ணுடைய அய்யனாா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா

திருச்சி: திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனாா், சாத்த பிள்ளை அய்யனாா் கோயில் சித்திரை தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நிகழாண்டு மே 4 ஆ... மேலும் பார்க்க

மே மாதம் முழுவதும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும். திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின் கீழ், ஸ்ர... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி: மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் ஜெயசீலன் (29). பந்தல் தொ... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்

திருச்சி: திருச்சி அருகே காவிரிக் குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அந்த நல்லூா் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவிரிக்... மேலும் பார்க்க