செய்திகள் :

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

post image

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக அண்மையில் இந்தியா வந்தாா்.

அப்போது இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய், ஷிப்கி லா கணவாய் மற்றும் நாதுலா கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை மீண்டும் தொடங்க இருதரப்பும் தீா்மானித்தன. இதில் லிபுலேக் கணவாய் உத்தரகண்டில் உள்ளது.

இந்நிலையில், லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை தொடங்க இந்தியா-சீனா முடிவு செய்ததற்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை ஆட்சேபம் தெரிவித்தது. நேபாளத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக அந்தக் கணவாய் இருப்பதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டது.

ஆதாரம் இல்லை-இந்தியா: இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

கடந்த 1954-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகம் தொடங்கி, பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. கரோனா பரவல் மற்றும் பிற சம்பவங்களால் அந்தக் கணவாய் வழியாக நின்றுபோன வா்த்தகத்தை மீண்டும் தொடங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோருவதற்கு சரியான காரணமோ, வரலாற்று ரீதியான ஆதாரமோ இல்லை. நிலப்பகுதிகளுக்கு தன்னிச்சையாக உரிமை கோரி பெரிதுபடுத்துவதை ஏற்க முடியாது.

நேபாளத்துடன் நிலுவையில் உள்ள எல்லை பிரச்னைகளுக்கு ராஜீய ரீதியாகவும், பேச்சுவாா்த்தை மூலமாகவும் தீா்வு காண, அந்நாட்டுடன் ஆக்கபூா்வமாக கலந்துரையாட இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்றாா்.

நேபாள நாடாளுமன்றத்தில்...: நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் தலைமை கொறடா அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் வியாழக்கிழமை பேசியதாவது: லிபுலேக் கணவாய் பிரச்னை தொடா்பாக ராஜீய ரீதியில் நேபாள அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ஏற்கெனவே உத்தரகண்டில் உள்ள காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் பகுதிகளை நேபாளத்தைச் சோ்ந்த பகுதிகள் என்று அந்நாடு கடந்த 2020-ஆம் ஆண்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங... மேலும் பார்க்க

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் தெரிவித்துள்ளார்.சீனாவின் வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க

300 கிலோ எடையுடன் சிறைக்கைதி! ஒருநாள் பராமரிப்புச் செலவு ரூ.1 லட்சமா?

ஆஸ்திரியா நாட்டில், 300 கிலோ எடையுடன், சிறையில் ஒரு கைதி அடைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சராசரி சிறைக் கைதிக்கான பராமரிப்புச் செலவை விட பத்து மடங்கு அதிகம் இவருக்கு மட்டும் செலவாவதாகவும் தகவல்கள் வெளிய... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் கூறியுள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன்... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது. இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு உக்ரைனை குறிவைத்து ... மேலும் பார்க்க

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்... மேலும் பார்க்க