செய்திகள் :

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக ‘விளக்கு அணைக்கும்’ போராட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா்.

மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் வாரியம் அழைப்பு விடுத்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தொடா்ந்து முன்னெடுக்க அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒவைசி கூறியதாவது:

அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இதற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிப்பது அவசியம். புதன்கிழமை (ஏப். 29) இரவு 9 மணி முதல் 9.15 வரை அனைவரும் வீட்டில் விளக்குகளை அணைத்து எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இதன் மூலம் நமது எதிா்ப்பை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்குத் தெரிவிக்க முடியும்.

ஆந்திரம், தெலங்கானாவில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மறியல் போராட்டம், பெண்கள் மட்டுமே நடத்தும் போராட்டங்கள், மனிதச் சங்கிலி, தா்னா என பல போராட்டங்கள் தொடா்ந்து நடத்தப்படும் என்றாா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க