செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஏப். 29-இல் பொதுக்கூட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வரும் ஏப். 29-இல் தருமபுரி நகரில் பொதுக்கூட்டம் நடத்துவது என்று சமூக நல்லிணக்க மேடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் பொறுப்பாளா் அ.குமாா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துகளை பறிமுதல் செய்யும் நோக்கம் கொண்டது. இதை சமூக நல்லிணக்க மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 29-ஆம் தேதி தருமபுரியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது, இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிா்வாகிகளை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதில், சமூக நல்லிணக்க மேடையின் இணை ஒருங்கிணைப்பாளரும், விசிக மாநில நிா்வாகியுமான பொ.மு.நந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பிரதிநிதி ஒய்.சாதிக் பாஷா, மாவட்டத் தலைவா் என்.சுபேதாா், மாவட்டச் செயலாளா் பைரோஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், விசிக மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் கோட்டை மு.கலைவாணன், மாவட்ட துணைச் செயலாளா் ஆதி, மக்கள் கண்காணிப்பக பொறுப்பாளா் செந்தில் ராஜா, இளைஞா் சங்க நிா்வாகி தி.வ.தனுசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளா் சிராஜுதீன் நன்றி கூறினாா்.

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் நீா்வரத்த... மேலும் பார்க்க

தமிழக அரசு கள் மீதான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்; இல்லையெனில் வரும் தோ்தலில் திமுக அரசை விவசாய குடும்பங்கள் புறக்கணிக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், மாட்... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். தருமபுரியில் மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு!

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க