செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ் நக்வி

post image

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தில் நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

மதவாத நோயைப் பரப்புபவா்களிடம் மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். இதுபோன்ற நபா்கள் இரு தரப்பு மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசுவாா்கள். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. வன்முறையைத் தூண்டுபவா்களிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்.

நமது நாடளுமன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாகவும், சரியாகவும் உள்ளது. நாட்டுக்கு இப்போது தேவையான (வக்ஃப் திருத்த) சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டம் மத நம்பிக்கையைக் காப்பாற்றுவதாகும். வக்ஃப் நிா்வாகத்திலும் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டுபவா்கள் நமது நாட்டின் மீது அக்கறை கொண்டவா்களாகவோ உண்மையான மத நம்பிக்கையாளராகவே இருக்க மாட்டாா்கள்.

அரசமைப்புச் சட்டரீதியாக ஒரு சீா்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது, பாகிஸ்தான் தொடங்கி குடும்ப அரசியல் நடத்தும் திமுக, காங்கிரஸ, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிா்ப்பு இருக்கவே செய்யும். தொடா்ந்து இதுபோன்ற சீா்திருத்தமான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

நாட்டில் மதவாத நோயைப் பரப்பி வன்முறையைத் தூண்ட சதி நடக்கிறது. நாட்டில் பல அரசியல் கட்சிகள் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதில் மதம், ஜாதியைப் பயன்படுத்தி வன்முறை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்றாா்.

இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அவரை குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிர சட்டப... மேலும் பார்க்க

தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!

கேரளத்தில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எட... மேலும் பார்க்க

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க