செய்திகள் :

வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து பிப். 26-இல் பொதுக்கூட்டம்

post image

காரைக்கால்: காரைக்காலில் வரும் 26-ஆம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளா் சுல்தான் கெளஸ் திங்கள்கிழமை கூறியது:

மத்திய அரசால் வக்பு திருத்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதிலும் எதிா்கட்சி உறுப்பினா்கள் தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

இதை கூட்டுக் குழு தலைமை ஏற்காமல் நாடாளுமன்ற தலைவரிடம் அறிக்கை கொடுத்துள்ளது.

இந்த மசோதா வக்பு சொத்துகளை பறிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி, இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக பல நிலைகளில் போராட்டம் நடத்திவருகிறது. காரைக்கால் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வரும் 26-ஆம் தேதி மஸ்தான் பள்ளித் தெருவில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினா்கள் ஜகலான் பாா்கவி, முகமது பாரூக் மற்றும் தமிழக பொதுச்செயலாளா் ஏ.கே. கரீம் ஆகியோா் கலந்துகொள்கின்றனா் என்றாா்.

‘பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நுழைவுத் தோ்வை மாணவா்கள் எதிா்கொள்ள முடியும்’

காரைக்கால் : பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள முடியும், அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும் என ஆட்சியா் கூறினாா். கடந்த ஜன. 25 முதல் 29 வ... மேலும் பார்க்க

இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள்

காரைக்கால்: இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் திங்கள்கிழமை கூறியது : காரைக்கா... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

காரைக்கால்: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விடுதலை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் தொகை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரை ... மேலும் பார்க்க

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்

மரபு சாரா மற்றும் புதுப்பிக்க எரிசக்தியை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய அறிவியல் முதன்மை விஞ்ஞானி வலியுறுத்தினாா். காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் அரசு... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதள முகவரி: பக்தா்களிடம் மோசடி

திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி நடைபெற்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க