செய்திகள் :

வங்கதேச தொடர் ரத்து: இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு!

post image

வங்கதேச அணிக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் இடையிலான 6 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 17 முதல் 31 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.

வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தரப்பில் அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை நடத்தப்படும்பட்சத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம்காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதே நேரத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது.

இந்தத் தொடர்கள் முடிந்ததும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி கோரிக்கை வைத்துள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்திவருகிறது. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் செயல்படும் ஆசியான் கிரிக்கெட் கவுன்சிலின் ஆசியக் கோப்பைத் தொடருக்கான முடிவைப் பொறுத்து இந்தத் தொடர் குறித்து முடிவு செய்யப்படும்.

பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்க்கியா இந்த வாரம் லண்டனில் நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் இருப்பார். அங்கு அவர் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணித் தேர்வாளர் அஜித் அகர்கர், இந்திய அணி வீரர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், அந்த ஆலோசனையைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கப்படும்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வரும் மோதல்போக்கு காரணமாகவும் ஆசியக் கோப்பைக்கான தேதிகள் முடிவு செய்யப்படாமலும் உள்ளன. இந்திய அரசு ஒப்புதல் அளித்தால் ஆசியக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 10 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முறையான ஒப்புதலுக்காக பிசிசிஐயும் காத்திருக்கிறது.

Sri Lanka request BCCI for white ball tour after Bangladesh series cancellation

இதையும் படிக்க :சர்வதேச கிரிக்கெட்டில் மற்றொரு மகுடம்..! ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளிய ஜடேஜா!

டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ்!

கைரன் பொல்லார்டுக்காக மும்பை இந்தியன்ஸ் பதிவிட்ட பதிவு சிஎஸ்கே ரசிகளை சீண்டும் விதமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சேலஞ்சர் போட்டியில் டெக்ஸஸ் சூப்பர் கிங்ஸ... மேலும் பார்க்க

இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸி.யின் கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் பிங்க் பந்... மேலும் பார்க்க

லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று ... மேலும் பார்க்க

இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை; பிசிசிஐ கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து... மேலும் பார்க்க

எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி

இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமா... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க