செய்திகள் :

வங்கிகளுக்கு ரூ.1.53 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

post image

மும்பை: ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகளுக்காக எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி மீது அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் - (கேஒய்சி) தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக எச்.டி.எஃப்.சி வங்கிக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்றொரு அறிக்கையில், ரிசர்வ் வங்கி பஞ்சாப் & சிந்து வங்கிக்கு (பி.எஸ்.பி.டி.ஏ) போன்ற சில உத்தரவுகளுக்கு இணங்காததற்காக ரூ.68.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிவிடெண்ட் அறிவிப்பது தொடர்பான சேவைகளுக்கு இணங்காததற்காக கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: திருப்பதி மெடிகேரில் ரூ.1,050 கோடி முதலீடு செய்யும் கோட்டக்!

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது. மேலும் பார்க்க

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது... மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க