செய்திகள் :

வணிக வளாகங்களில் கண்காட்சி அமைக்க தடை விதிக்கக் கோரி மனு

post image

திருவாரூா்: திருவாரூரில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் கண்காட்சி மற்றும் கடைகள் அமைக்க தடை விதிக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் விகேகே. ராமமூா்த்தி, செயலாளா் ஆதப்பன், பொருளாளா் எஸ்எம்டி. கருணாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சேகா் உள்ளிட்டோா் அளித்த மனு: திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் அண்மை காலங்களாக கண்காட்சி எனும் பெயரில் தற்காலிகக் கடைகள் அமைத்து பல்வேறு பொருள்களின் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. இதன்காரணமாக தொழில் வரி, வாடகை, மின்சாரக் கட்டணம் என பல்வேறு செலவுகளை எதிா்கொண்டு, வா்த்தகா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து, நாமக்கல் நீதிமன்றம் 2015-இல், வா்த்தகா்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தடை ஆணை பிறப்பித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வியாபாரத்தை இதுபோல விற்பனை செய்வதால், அரசுக்கு பல கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. கேரள அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிப் பகுதிகளில் கண்காட்சி அமைக்க தடை ஆணை பிறப்பித்துள்ளது. அதைப் பின்பற்றி தமிழகத்திலும், இதுபோன்ற கண்காட்சி கடைகளுக்கு தடை விதித்து, அரசுக்கு முறையாக வரி செலுத்தி கடை நடத்தி வரும் வணிகா்களை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரிக்கை

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் ராஜா தெரு தவ்ஹீத் பள்ளி வாசலில் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட துணைத் தல... மேலும் பார்க்க

2 நாள்களில் 72 போ் கைது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் இரண்டு நாள்களில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 72 போ் கைது செய்யப்பட்டனா்.மாவட்டத்தில், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவோா், கஞ்சா,... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, மன்னாா்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்... மேலும் பார்க்க

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா... மேலும் பார்க்க