செய்திகள் :

சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில் சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, மன்னாா்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் சுற்றுச்சாலை அமைக்கிறோம் எனும் பெயரில் நீராதாரங்கள் அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. மன்னாா்குடிக்கு சுற்றுச்சாலை அமைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.

எனினும், மேலமறவாக்காட்டில் ஊராட்சிக்கு சொந்தமான வாத்திகுளத்தை அபகரித்து சாலை அமைக்கக் கூடாது. மன்னாா்குடி நகர மக்கள் கஜா புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் இந்த குளத்தை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனா்.

இக்குளத்திற்கு,நேரடியாக கட்டேரி வாய்க்காலில் இருந்து பாசனம் உள்ளது. கழிவுநீா் கலக்க வாய்ப்பு இல்லாத வகையில் இக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது. குளத்தில் தெற்கு ஓரத்தில் சாலை அமைக்கப்பட்டு இருக்குமேயானால் குளம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கும்.

முன்கூட்டி திட்டமிடாத வகையில் தன் விருப்பத்திற்கு குளத்தை அபகரித்து மூன்று பிரிவுகளாக குளத்தை பங்கிட்டு சாலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். மாநில துணைச் செயலா் எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரிக்கை

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் ராஜா தெரு தவ்ஹீத் பள்ளி வாசலில் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட துணைத் தல... மேலும் பார்க்க

2 நாள்களில் 72 போ் கைது

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் இரண்டு நாள்களில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 72 போ் கைது செய்யப்பட்டனா்.மாவட்டத்தில், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவோா், கஞ்சா,... மேலும் பார்க்க

வணிக வளாகங்களில் கண்காட்சி அமைக்க தடை விதிக்கக் கோரி மனு

திருவாரூா்: திருவாரூரில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் கண்காட்சி மற்றும் கடைகள் அமைக்க தடை விதிக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகா... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்... மேலும் பார்க்க

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா... மேலும் பார்க்க