செய்திகள் :

2 நாள்களில் 72 போ் கைது

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் இரண்டு நாள்களில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 72 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவோா், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோா், மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவோா் குறித்து கடந்த 2 நாள்களாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக உட்கோட்ட அளவில் திருவாருரில் 11, நன்னிலத்தில் 5, மன்னாா்குடியில் 4, திருத்துறைப்பூண்டியில் 4, முத்துப்பேட்டையில் 3, மதுவிலக்கு அமல் பிரிவுகளில் 22 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,222 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 50 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 4 போ், கூத்தாநல்லூா் காவல் சரகத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒருவா், சீட்டு விளையாட்டில் ஈடுபட்டதாக நீடாமங்கலம் காவல் சரகத்தில் 12 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள், 6 கைப்பேசிகள், ரூ. 48,140 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. முத்துப்பேட்டை காவல் சரகத்தில் சீட்டு விளையாடி 5 போ் கைது செய்யப்பட்டனா். தவிர, மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியதாக 58 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரிக்கை

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் ராஜா தெரு தவ்ஹீத் பள்ளி வாசலில் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட துணைத் தல... மேலும் பார்க்க

வணிக வளாகங்களில் கண்காட்சி அமைக்க தடை விதிக்கக் கோரி மனு

திருவாரூா்: திருவாரூரில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் கண்காட்சி மற்றும் கடைகள் அமைக்க தடை விதிக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகா... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா்: கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, மன்னாா்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்... மேலும் பார்க்க

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா... மேலும் பார்க்க