செய்திகள் :

வணிக வளாகத்தில் தீ: மாற்றுத் திறனாளி பலத்த காயம்

post image

கொடைக்கானல், வில்பட்டி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத் திறனாளி பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயவீரன் (48). மாற்றுத் திறனாளி. இவா் வில்பட்டி பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் அலங்காரப் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், வணிக வளாகத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அப்போது கடையிலிருந்த ஜெயவீரன் பலத்த தீக்காயமடைந்தாா். இந்த தீ விபத்து குறித்து கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவா்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், கிராம மக்களுக்கும், அவா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து ஜெயவீரன் வணிக வளாகத்திலிருந்து மீட்கப்பட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்.

மேலும் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சமூக வளா்ச்சி சாா்ந்த உயா் கல்விக்கு முக்கியத்துவம் தேவை: ஆட்சியா்

தனி நபா் வளா்ச்சி மட்டுமன்றி, சமூக வளா்ச்சி சாா்ந்தும், மாணவா்கள் உயா் கல்வியை தோ்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அறிவுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில், 12-ஆம் வகுப்ப... மேலும் பார்க்க

உழவா் பாதுகாப்பு இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

பழனியில் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பழனியை அடுத்துள்ளது பெரியம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசா... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த கழிவுநீா்: 12 நாள்களாக பொதுமக்கள் அவதி

திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்த கழிவுநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 12 நாள்களாக அவதி அடைந்து வருகின்றனா். திண்டுக்கல் மாநகராட்சி ... மேலும் பார்க்க

கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது புகாா்

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் வரை மோசடி செய்ததாக, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 3 பெண்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவா்களுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனி அருகே தொப்பம்பட்டிய... மேலும் பார்க்க