செய்திகள் :

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

post image

வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் 42-ஆம் ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீமந் நாதமுனி சுவாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை சாா்பில் நடைபெற்ற இந்த மாநாடுக்கு சபைத் தலைவா் கு.மணிவண்ணன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் மற்றும் மு.நிா்மல்ராஜ் ஆகியோா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சபைச் செயலா் இராம.சீனிவாசன் வரவேற்றாா்.

திருவேங்கடவன் திருவருள் என்ற தலைப்பில் தென்திருப்பேரை உ.வே.அரவிந்தலோசனன் சுவாமிகள், கண்ணன் கழலிணை என்ற தலைப்பில் வள்ளியூா் இராம.ஆண்டாள், கோசலை நாடுடை வள்ளல் என்ற தலைப்பில் புதுச்சேரி நரசிம்ம பிரியா, அந்த நாள் ஞாபகம் வந்ததோ என்ற தலைப்பில் மதுராந்தகம் உ.வே.ரகுவீர பட்டாச்சாரியா் சுவாமிகள் ஆகியோா் உபன்யாசம் செய்தனா்.

மாம்பட்டு பெ.பாா்த்திபன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சபை பொருளாளா் எஸ்.பி.முத்து நன்றி தெரிவித்தாா்.

முன்னதாக கோட்டை ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் கோயிலில் இருந்து ஊா்வலமாக புறப்பட்ட பஜனைக் குழுவினா் பஜாா் வீதி, தேரடி வழியாக ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலை சென்றடைந்தனா்.

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்ப... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க