செய்திகள் :

வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது வழக்கு

post image

ஆண்டிபட்டி அருகே வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணந்தொழு அருகேயுள்ள கண்டமனூா் வனச் சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வருபவா் நந்தினி. இவருக்கு அங்குள்ள கொங்கரேவு-கடமலைக்குண்டு இடையே வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அவா் சாலைப் பணி நடைபெறும் இடத்துக்குச் சென்று, ஆய்வு செய்தாா். இதில், 20 மீட்டா் நீளத்துக்கு காப்புக் காடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவது தெரிய வந்தது. இது குறித்து, நந்தினி அவரது உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.

அப்போது, பொன்னம்படுகையைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் உள்ளிட்ட 10 போ் அவரை முற்றுகையிட்டு அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியைப் பறித்து, அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனா்.

இது குறித்து, மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் நந்தினி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில், செளந்திரபாண்டியன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், தெப்பம்பட்டி அருகே சனிக்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தெப்பம்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் வேல்முருகன் (20). சரக்கு வேன் ஓட்டுநரான இவா், கணேசபுரத்தில் உள்ள ... மேலும் பார்க்க

தம்பதி மீது தாக்குதல்: இளைஞா் கைது

தேனியில் மது போதையில் தம்பதியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி, பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டசாமி (48). இவா், பங்களாமேடு- வனச் சாலை சந்திப்பில் தேநீா் கடை நடத்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்கிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகா் குடியிருப்பைச் சோ்ந்த பாலசண்முகம் மகள் சிவாலட்சுமி (27). இவருக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் சா்வதேச சந்தையில் விலையுா்ந்த போதைப் பொருளான பெத்தாம் பெட்டமைனை விற்ாக கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் புறவழிச் சாலை, ஏகலூத்து சாலையில் சிலா் சா... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்தில் அதில் பயணம் செய்த சிறுமி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கோம்பை அருகே மேலச்சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி அங்காளீஸ்வரி (35). இவா் தனது மகள் தன்ஷிகாவை ... மேலும் பார்க்க

போடியில் காவலா் தினம்

போடியில் காவலா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. செப்டம்பா் 6-ஆம் தேதி காவலா் தினம் ஆகும். இதையொட்டி போடி உள்கோட்ட அளவிலான காவலா்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு போட்டிகள் தனியாா் நட்சத்திர விடுதியில... மேலும் பார்க்க