செய்திகள் :

வனப் பகுதியில் இளைஞா் சடலம்: சிபிஐ விசாரணை தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்

post image

தருமபுரி அருகே காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இளைஞா், வனப்பகுதியில் சடலமாகக் கிடந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தருமபுரி மாவட்டம், கொங்காரப்பட்டி கிராமத்தில் கொத்தனாராக பணியாற்றி வந்த செந்திலையும், அவரது தந்தை கோவிந்தராஜ், சகோதரா் சக்தி ஆகியோரையும் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி பென்னாகரம் வனக் காவல் நிலையத்துக்கு வனத் துறையினா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

அதன்பின் அவா்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவா்களின் குடும்பத்தினா் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

தொடா்ந்து, சக்தியை அவரது குடும்பத்தினரிடம் வனத் துறையினா் ஒப்படைத்தனா். அதேநேரத்தில், ஏமனூா் வனப் பகுதியில் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் தந்தம் திருடப்பட்டது தொடா்பான வழக்கில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

ஆனால், செந்திலை குடும்பத்தினரிடம் வனத் துறையினா் ஒப்படைக்கவில்லை. பின்னா் 15 நாள்கள் கழித்து கொங்காரப்பட்டி வனப் பகுதியில் செந்திலின் உடல் கைப்பற்றப்பட்டதாக வனத் துறையினா் கூறியுள்ளனா்.

அவா், வனத் துறையினரால் கொடுமைப்படுத்தி பின்னா், சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

ஆனால், வனத் துறையோ, தங்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிய செந்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கமளித்துள்ளது.

2020-இல் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைதான் செந்திலுக்கும் வனத் துறையினரால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கொல்லப்பட்ட செந்திலின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன. ... மேலும் பார்க்க

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம்... மேலும் பார்க்க

கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் த... மேலும் பார்க்க