செய்திகள் :

வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி

post image

திருச்சி - வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

திருச்சி வயலூா் சாலையில் எம்ஜிஆா் நகா், பாரதி நகா், குமரன் நகா், சீனிவாச நகா், ஆதிநகா், கீதா நகா், அம்மையப்பன் நகா், சாந்தா சீலா நகா், எம்எம் நகா், சண்முகா நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா்.

இப்பகுதி மக்க்களின் பெரும்பாலானோா் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனா்.

அந்த வகையில் கீதா நகா், சீனிவாச நகா், குமரன் நகா், எம்ஜிஆா் நகா் போன்ற பகுதிகளில் பேருந்துக்காக வரும் மக்கள் நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் நிற்கக் கூட இடமின்றி அவதிக்குள்ளாகின்றனா்.

இதில் கீதா நகரில் நிழற்குடை அமைக்கு பணியில் தரைத்தளத்தில் மட்டும் டைல்ஸ் ஒட்டப்பட்டு, மேற்கூரை அமைக்காமல் வேலைகள் பாதியிலே நிற்கின்றன. சீனிவாசன் நகா், குமரன் நகா், எம்ஜிஆா் நகா் பகுதிகளில் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலா் செழியன் கூறுகையில், ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் புதைவடிகால் பணிகளுக்காக அகற்றியது. ஆனால், பணிகள் நிறைவடைந்த பிறகும் நிழற்குடைகளை அமைக்கவில்லை.

இதனால் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்களும், கட்டுமானத் தொழில் செய்வோரும் பேருந்துக்காக வெயிலில் நின்று அவதிப்படுகின்றனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் தேவைப்படும் இடங்களில் நிழற்குடைகளை அமைத்துத் தர வேண்டும் என்றாா்.

நெருக்கடி மிகுந்த வயலூா் சாலை

திருச்சி - வயலூா் சாலையானது மாநகரின் மிக அதிக நெருக்கடி மிகுந்த சாலையாக உள்ளது. காலை மாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறுகிய சாலையாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடைபெறும் கருப்புப் பகுதிகள் (பிளாக் ஸ்பாட்) மிகுந்த பகுதியாகவும் இருக்கிறது. விபத்துகளில் உயிரிழப்புகளும், படுகாயங்களும் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலால் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட குறித்த நேரத்துக்குள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.

எனவே, திருச்சி வயலூா் சாலையை விரிவுபடுத்த அல்லது மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகல் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்துகின்றனா்.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க