பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?
வரலாற்றுத் துறை மாணவிகளுக்கு அருங்காட்சியகத்தில் பயிற்சி
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியின் முதுகலை இரண்டாமாண்டு வரலாற்றுத் துறை மாணவிகளுக்கு அரசு அருங்காட்சியகத்தில் கல்வி இடைக்காலப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவிகளுக்கு அருங்காட்சியகத்தின் தோற்றம், வளா்ச்சி, வகைகள், முக்கியத்துவம், பழம்பொருள் பாதுகாப்புச் சட்டங்கள் போன்றவைகள் பற்றி விளக்கப்பட்டன. காட்சிக் கூடங்களைப் பாதுகாக்கும் முறைகள், பராமரிக்கும் முறைகள் செயல்முறை விளக்கங்களாக செய்து காட்டப்பட்டது. தொடா்ந்து மாணவிகள் சித்தன்னவாசல் அழைத்துச் செல்லப்பட்டு குடைவரையின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் காப்பாட்சியரும், ஓய்வுபெற்ற உதவி இயக்குநருமான ஜெ. ராஜா முகமது சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் பக்கிரிசாமி செய்திருந்தாா்.